வாரணாசி தொகுதியில் வரும் 12-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இத்தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் தலைவர்கள் வாரணாசியை முற்றுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று வாரணாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் கேஜ்ரிவால் பேசுகையில், ''வாரணாசி தொகுதியில் மோடி தோற்பது உறுதி. மேல்தட்டு அரசியலை வாரணாசி மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள். மோடியின் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது தவறில்லை. மேலும், தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பா.ஜனதா போராட்டம் நடத்தியது அரசியல் நாடகம்'' என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.