BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 May 2014

பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது ‘ஹர ஹர மோடி‘ என ஒரு கும்பல் கோஷம்


உத்தர பிரதேச மாநிலம் டியோரியாவில் இன்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், பாஜக நரேந்திர மோடியை வாழ்த்தி ‘ஹர ஹர மோடி’ என்று கோஷமிட்டனர். இதனால் ராகுல் காந்திக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே போலீசார் கூட்டத்திற்குள் சென்று அந்த கும்பலை அப்புறப்படுத்தினர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச வீடு, இலவச மருத்துவம், ரேஷனில் கிலோ ஒரு ரூபாய் விலையில் அரிசி மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் நரேந்திர மோடி மீது வழக்கமாக கூறும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். மோடி பிரதமராக வந்தால் அவரது தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media