BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 May 2014

வாரணாசி தொகுதியின் சிறப்பு பார்வையாளராக தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நியமனம்


தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் பிரவீண் குமார். இவரது தலைமையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அமைதியாக ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா போன்றவற்றை தடுப்பதற்காக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் வாரணாசி தொகுதிக்கு சிறப்பு பார்வையாளராக பிரவீண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாரணாசியில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடி களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளை திறமையாக செய்வதற்கு சிரமமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரவீண்குமாரை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media