BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 May 2014

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி காலமானார்


மூத்த காங்கிரஸ் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ஜனார்த்தன ரெட்டி காலமானார். அவருக்கு வயது 80. நிசாமஸ் மருத்துவ கழகத்தில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. ஜனார்த்தன ரெட்டி, கல்லீரல் நோய் காரணமாக சில தினங்களாக நிசாமஸ் மருத்துவ கழகத்தில் சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை இறந்தார். நெல்லூரில் பிறந்த ஜனார்த்தன ரெட்டி 1990 - 1992 காலகட்டத்தில் ஆந்திர முதல்வராக இருந்தார். மக்களவைக்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றினார். அவரது மனைவி ராஜலட்சுமியும் அமைச்சராக இருந்தார்.

ஜனார்த்தன ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த போதுதான் மாநிலத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்த தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media