நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் செய்துள்ள ராஜபக்சே, இந்தியாவிற்கு வருவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கட்சியின் செயலர் வைகோ, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.