விமான நிலையத்திற்குள் பணிபுரியும் துப்புரவு ஊழியர் ஒருவர், ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு பிளாஸ்டிக் பை அழுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்த்தார். சந்தேகமடைந்த அவர் அந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. இதுபற்றி சுங்க அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.
உடனே சுங்க அதிகாரிகளும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளும் அங்கு வந்து 10.5 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி ஆகும். இந்த தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்து, அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருக்க இவ்வாறு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.