நைஜீரியாவின் மத்திய நகரான ஜோஸில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்து 2 கார் குண்டுகள் வெடித்தன. இதில் 118 பேர் உடல் சிதறி பலியாகினர். அந்தப் பகுதியே சடலங்கள் இரைந்து கிடந்ததால் கோரமாக காட்சி அளித்தது.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் வழக்கமாக பொகோ ஹராம் தீவிரவாதிகள் நிகழ்த்தும் குண்டு வெடிப்புகள் போலவே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மைகாலமாக பொகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சமீபத்தில் பொகோ ஹராம் தீவிரவாதிகளின் அராஜகம் தாங்க முடியாத நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்து மக்கள், அத்தீவிரவாதிகளை தாக்கி கொன்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.