சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தினுள் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடித்த இரட்டை குண்டுக்கான இணைப்பு ‘குவார்ட்ஸ்’ கடிகாரத்தில் அவசரக் கோலத்தில் பொருத்தப்பட்டிருந்ததால், அந்த குண்டு வெடிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
எனினும், சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும், பீகாரில் மோடி பிரசாரம் செய்தபோது பாட்னா ரெயில் நிலையத்தில் வெடித்த குண்டுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த யாசீன் பத்கல் மற்றும் அக்தர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெங்களூரு நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்திய முஜாகிதீன் அமைப்பினர் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து தந்தவர்கள் என்பதால் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.