BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 5 June 2014

சேலையூர் காவல்நிலையத்தில், கற்பழிப்புக்கு ஆளான பெண்ணை மிரட்டி குற்றவாளிகளை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்?


சென்னை மாநகர காவல்துறையின் கீழ் செயல்படும் சேலையூர் காவல்நிலையத்தில் திருட்டு முதல் கற்பழிப்பு வரை எல்லாமே கட்ட பஞ்சாய்த்துதான்…
24.5.14ம் தேதி இரவு 10மணி அளவில் சிட்லபாக்கம் ரமணா தெருவில் அதிவேகமாக வந்த காரிலிருந்து 17-18 வயது பெண், அலங்கோலமாக வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டாள்.. அந்த பெண் அப்பா என்ற கதறியபடி வீட்டிற்கு சென்று அப்பா, நாலு பேர் என்னை கற்பழித்துவிட்டனர் என்ற கதறினார். பாவம் தந்தை அந்தோணி மகளுக்கு முதலுதவி செய்துவிட்டு, புகார் மனுவை எழுதிக்கொண்டு சேலையூர் காவல்நிலையம் ஒடினார்..
உண்மையில் சிட்லபாக்கம் ரமணா தெருவுக்கு சிட்லபாக்கம் காவல்நிலையம்தான் வரும். ஆனால் சேலையூர் காவல்நிலையம் அருகில் இருப்பதால் சேலையூர் காவல்நிலையம் வந்தார். என்னய்யா…புகாரா என்ற சேலையூர் காவல்நிலையம் ஆய்வாளர் குணவர்மன்.. கற்பழிப்பு புகாரை படித்துவிட்டு, ஏட்டுவிடம் இதற்கு சி.எஸ்.ஆர் போட்டுவிடு… இந்த ஆளை இங்கேயே உட்காரவை என்று சென்றுவிட்டார்..
இரவு 12.10மணிக்கு வந்த ஆய்வாளர் குணவர்மன்.. என்னடா உன் பொண்ணுதான் நான் பையன்களை தள்ளிக்கிட்டு போய் இருக்கு..சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருக்கும் என்று மிரட்டினார். மரியாதையா வழக்கு புகாரை வாபஸ் வாங்கி எழுதிக்கொடுத்துவிடு.. இல்லைன்னா உன் பொண்ணு மீது விபச்சார வழக்கு.. உன் மீது மாமா வேலை பார்த்ததாக வழக்கு போட்டு குடும்பத்துடன் சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினார்.
பெண்ணின் அப்பா அந்தோணி இல்லை சார். என் பொண்ணு பெங்களூரில் பாட்டி விட்டிலிருந்து படித்து வந்தது. சிட்லபாக்கம் வந்து இரண்டு மாசம்தான் என்று சொல்லி முடிக்கு முன்பு, இவனை ஜட்டியோடு உள்ளே தள்ளுடா என்ற சத்தம் போட..
அந்தோணி ஜட்டியுடன் இல்லை, நிர்வாணமாக லாக் அப்பில் வைக்கப்பட்டார். போலீசாரை அழைத்து, இந்த மகனையும், மகளை அழைத்து வா என்றார்.. கற்பழிக்கபட்ட பெண் மற்றும் 10 வயது தம்பி இருவரும் நள்ளிரவு 2மணிக்கு காவல்நிலையம் அழைத்து வரப்பட்டார்கள்.. தந்தை நிர்வாண கோலத்தில் பார்த்த பெண் கதற… அந்தோணி என்ன வேண்டுமானாலும் எழுதி வாங்கிங்க.. எங்களை விட்டுவிடுங்க.. என்றவுடன்..
புகாரை வாபஸ் பெற்றதாக எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினார் சேலையூர் காவல்நிலைய ஆய்வாளர் குணவர்மன்..
அடுத்த நாள் காலை அந்தோணி வீட்டிற்கு சென்ற ஆய்வாளர் குணவர்மன், இரண்டு நாளில் வீட்டை காலி செய்துவிட்டு ஒடிவிடு என்று மிரட்டினார்.
அடுத்த நாளே அந்தோணி, பெண், மகனுடன் தலைமறைவாகிவிட்டார். அந்தோணி நடத்தி வந்த சி.டி கடை பூட்டியபடி உள்ளது..
அந்தோணியின் பெண்ணை கற்பழித்த நான்கு பேரும், தாம்பரம் பகுதியில் ஆளும் கட்சியில் முக்கிய பிரமுகர்களின் மகன்கள்..
அரசியல் பிரமுகர்கள் ஆய்வாளர் குணவர்மனுக்கு வாரி இறைக்க…குணவர்மன்.. கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை, நிர்வாண கோலத்தில் மிரட்டி புகாரை திரும்ப பெறுவதாக எழுதி வாங்கி உள்ளார்..
பெண் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டில் சென்னை மாநகர காவல்துறையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதியை நினைக்கும் போது..காவல்துறை அதிகாரிகளுக்கு மனிதாபிமானமே இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது..
சேலையூர் காவல்நிலைய ஆய்வாளர் குணவர்மன் என்ன செய்திருக்க வேண்டும்.. இந்த முகவரி சிட்லபாக்கம் காவல்நிலையம் எல்லையில் வருகிறது என்று சிட்லபாக்கம் காவல்நிலையம் அனுப்பி இருக்க வேண்டும்.. சிட்லபாக்கம் காவல்நிலையம் அனுப்பாமல் இவரே விசாரணை செய்த்தை பார்க்கும் போது, கற்பழித்த நான்கு மிருகங்களுக்கும் சேலையூர் காவல்நிலைய ஆய்வாளர் குணவர்மனுக்கு தொடர்பு உள்ளது உறுதியாக தெரிகிறது..
இந்த விசயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பணம் பாதாளம் வரை பாயும்…அரசியல்வாதிகளின் பணம்… பிணமும் வாயை பிளக்கும்..
சென்னை மாநகர காவல்துறை ஜார்ஜ் ஐ.பி.எஸ்.. நடவடிக்கை எடுப்பாரா..
தமிழகத்தின் பெண் முதல்வர் காதுகளுக்கு இந்த கற்பழிப்பு-கட்டபஞ்சாய்த்து விவகாரம் செல்லுமா
- Sankarraj Ayyalusamy 
shared via தின இதழ் கண்ணன் வெளியிட்ட செய்தி அப்படியே இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் உள்ள கொடூரத்தினால் இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை நாங்களும் பகிர்கிறோம். நீங்களும் பகிருங்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media