தேமுதிக உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலு வலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
தேமுதிக சார்பில் போட்டியிட்ட 14 வேட்பாளர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் விஜயகாந்த் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களின் பணி சிறப்பாக இல்லை என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் கருது கிறார். இதை அவர் மாவட்டச் செயலாளர்களிடமே கூறி, எச்சரித்தார். வரும் காலங்களில் ஆக்கபூர்வமான பணிகளை மேற் கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி, தேமுதிகவுக்கு சாதக மாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போதுள்ள கூட்டணியே 2016 சட்டசபைத் தேர்தலிலும் தொடரவும் வாய்ப் புள்ளது. மாவட்ட நிர்வாகங்களை பலப்படுத்தும் வகையில் விரைவில் மாவட்டச் செயலாளர்களின் தனி கூட்டத்தையும் விஜயகாந்த் நடத்தவுள்ளார். " என்று அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.