BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 5 June 2014

தீவிரவாதிகளின் பலாத்கார முயற்சிக்கு இனங்காத பெண் தலையில் சுடப்பட்டு கொலை


மேகாலயாவில் 35 வயது பழங் குடியின பெண் ஒருவர், தீவிரவாதிகளின் பாலியல் பலாத்கார முயற்சிக்கு, எதிர்ப்பு தெரிவித்ததால் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். காரோ தேசிய விடுதலைப் படை (ஜி.என்.எல்.ஏ) தீவிரவாதிகள் இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இப்பெண் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜி.என்.எல்.ஏ. தீவிரவாதிகள் நான்கைந்து பேர், அப்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை வெளியில் இழுத்துச் சென்றுள்னர். முதலில் அவரை அடித்து உதைத்த அவர்கள், அவரிடம் அத்துமீறி நடந்துள்ளனர். பின்னர் அப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், அப்பெண்ணின் தலையில் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் அப்பெண் தலை பிளவுபட்டு இறந்ததாக மாநில போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media