இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இந்திய அணி தொடர் தோல்விகளை பெற்று வருகிறது .கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் 10 இல் தோல்வியையும் 2 இல் டிராவும் செய்து இருந்தது. எனவே தோனியை கேப்டனில் இருந்து தூக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று உள்ளது.
சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்தியா லார்ட்ஸ் வெற்றி பெற்று உள்ளது. சச்சின், திராவிட், லட்சுமனன், கும்பளே இல்லாமல் இந்திய அணி பெறும் வெற்றி இது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 295 ரன்களும், இங்கிலாந்து அணி 319 ரன்களும் அடித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 342 எடுத்தது. 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயக்கப்பட்டது. இஷாந்த் ஷர்மாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.