மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கியமான நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையில் தற்போது 136 அடி நீர் தேக்கப்படுகிறது. ஆனால் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாவட்ட மக்களும் விவசாயிகளும் கோரி வருகிறார்கள். இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா முல்லை பெரியாறில் 142 அடி நீரை தேக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசிற்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு முன்னிலையில் 142 அடி நீரை தேக்கும் வகையில் அதன் மதகுகள் இறக்கப்பட்டன.
இந்த நீதிமன்ற வெற்றி முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சட்டப்பூர்வமான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். இதனை கொண்டாடும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா மதுரையில் வருகிற 28–ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மதுரை ரிங்ரோடு பாண்டிக்கோவில் அருகே உள்ள மஸ்தான் பட்டியில் பிரம்மாண்ட விழா எடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக கலந்தாலோசனை கூட்டத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திலஜூ முதல்வருக்கு பாராட்டுவிழா நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.