இங்கிலாந்து வீரர்கள் இப்போது தங்கி இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டலில் பேய்கள் இருப்பதாக அந்த நாட்டு வீரர்கள் அச்சம் தெரிவித்து உள்ளார்கள். பேய்கள் இருப்பதை இங்கிலாந்து வீரர்களால் உணர முடிவதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் தனது வெளிபடையான கருத்தை தெரிவித்து உள்ளார். இலங்கை தொடரின் போது ஹோட்டல் அறையில் மிகவும் பயந்து வாழ்ந்ததாக கூறியுள்ளார்.
குளியலைறயில் உள்ள பைப்புகள் தானாகவே திறந்து கொள்கின்றன. பின் விளக்கை போட்டவுடன் அவை அனைந்து விடுவதாக கூறியுள்ளார். ஒரு நாள் இரவு 1.30 மணிக்கு தனக்கு விளிப்பு வந்ததாகவும் , அப்போது தனது அறையில் வேறு யாரோ ஒருவர் இருப்பதை அவர் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் அவரது தோழியும் பயந்து விட்டதாக கூறுகிறார். இது போல அந்த அணி வீரர் பென் ஸ்டோக்ஸுக்கும் நடந்ததாக கூறினார். இப்போது அவர்கள் பயந்து தங்கள் அறைகளை காலி செய்து வருகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.