
கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சதிஷ் குமார் சிவலிங்கம் என்பவர். ஆண்கள் 77 கிலோ பளுதூக்கும் பிரிவில் இவர் 149 கிலோ எடைதூக்கி சாதனை புரிந்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார். இவருக்கு அடுத்த இந்தியாவை சேர்ந்த ரவி என்பவர் வெள்ளி பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் பிரான்காய்ஸ் வெண்கல பதக்கம் வென்றார். சதிஷ்குமார் ஒரு ராணுவ வீரர். இவரது தந்தையும் ராணுவ வீரர் மட்டுமல்லாமல் அவரும் பளுதூக்கும் வீரர். தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சதிஷ்குமாருக்கு நமது வாழ்த்துக்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.