.jpg)
தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. உடல் நலம் சரியான பின்பு அவர் வீடு திருப்பினார். ஆனால் அவரது உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை என கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் . இந்த பயணம் ரகசியமாக இருந்து உள்ளது. அவருடன் அவரது மனைவி பிரமேலதா மட்டும் சென்றார்.ஆனால் அவர் மகனின் பட வேலைக்காக சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து கேப்டன் நேற்று சென்னைக்கு திரும்பி உள்ளார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். கேப்டனுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லை. முதலில் அவர் மனைவி ஒரு காரில் சென்று விட்டார். பின்பு முகத்தை துணியால் மூடியபடி விஜய்காந்த் சக்கர நாற்காலியில் வந்தார். காரில் ஏறும் போது அவர் துணியை எடுத்ததால் தான் அவர் விஜய்காந்த் என்றே பலருக்கு தெரிய வந்தது .
.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.