திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக வைகோவும், விஜயகாந்த்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த்க்கு ஹார்ட் அட்டாக் என்றும் அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின, ஆனால் விசாரித்ததில் இது புரளி என்றும் விஜயகாந்துக்கு இன்று காலை ஏற்பட்டது நெஞ்சு எரிச்சல் என்றும் தெரியவந்தது.
தே.மு.தி.க தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார், இது வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்து மாலை வீடு திரும்புவார் என்றும் தேமுதிக மற்றும் மருத்துவமனை குறிப்புகள் தெரிவிக்கின்றன.
வைகோவுக்கு நேற்றிரவு வயிறு வலி ஏற்பட்டதாகவும் அது தொடர்பான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைகோ மருத்துவமனையில் இருந்து திரும்பி சென்னையில் உள்ள வீட்டில் தங்கி பணிகளை மேற்கொள்ளவதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.