சென்னை முழுவதும் சி.டி. கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 5
ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 பேர்
கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னையில் பாரிமுனை பர்மா பஜார், ஈவ்னிங் பஜார், சைனா பஜார், நேதாஜி
பஜார், ரத்தன் பஜார் ஆகியப் பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் பெருநகர
காவல்துறையின் திருட்டு சி.டி. தடுப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை
திடீர் சோதனை நடத்தினர்.
இச் சோதனையில் பல கடைகளில் தமிழ் புதிய திரைப்படங்களான அரண்மனை,
மெட்ராஸ்,ஜீவா, ஆடாமா ஜெயிச்சோமடா உள்ளிட்ட பல படங்களில் திருட்டு சி.டி.
விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த சுமார் 5 ஆயிரம்
திருட்டு சி.டி.க்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார்,
வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக், சேது, முத்துக்குமார், கோபால்,
முகப்பேரைச் சேர்ந்த கருப்பையா, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகம்மது
ஹனிபா, நிஜாம் ஆகிய 8 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.