மகளிர் 4*400 மீட்டர் தொடர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளது . இது தொடர்ந்து 4 வது முறையாக ஆசியப் போட்டிகளில் தங்கம் வெல்கிறது இந்திய அணி . இவர்கள் 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா தான் 4*400 தொடர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று வருகிறார்கள் . இவர்கள் தங்களின் பழைய சாதனையை இவர்களே முறியடித்துள்ளனர் .
பழைய சாதனையான 3:29:02 என்ற நேரத்தை இவர்கள் முறியடித்து புதிய சாதனையாக 3:28:68 என்ற நேரத்தை வைத்தனர் . இது இந்தியாவிற்கு தடகளத்தில் கிடைக்கும் 2 வது தங்கம் . பெண்கள் தட்டு எறிதலில் சீமா புனியா இதற்கு முன் தங்கம் வென்று இருந்தார் .
இந்திய அணியின் சார்பாக பன்வார் , டின்டு லுக்கா , மந்தீப் கவுர் மற்றும் பூவம்மா ஆகியோர் ஓடினர் . டின்டு லுக்கா 800 மீட்டர் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . பூவம்மா 400 மீட்டர் பந்தயத்தில் வெண்கலம் வென்று இருந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.