BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 August 2013

தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் ஒரு தலித் ஆக இருப்பார் - சந்திரசேகர ராவ் மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்

தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் ஒரு தலித் ஆக இருப்பார் - சந்திரசேகர ராவ் மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்

தெலுங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு சமீப காலங்களில் முக்கிய காரணமாக இருப்பவர் டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய போராட்டங்கள், இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேசிஆர் என்கிற சந்திரசேகர ராவ் தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும் தனது கட்சி தேர்தலில் வென்றால் ஒரு தலித்தை முதல்வர் ஆக்குவோம் என்றார், மேலும் தெலுங்கானாவில் பிசி, எஸ்சி மைனாரிட்டிகள் அனைவரும் 85% ஆக உள்ளார்கள் என்று குறிப்பிட்ட கேசிஆர் கல்வி வேலை வாய்ப்புகளில் 12% இடஒதுக்கீடு மைனாரிட்டிகளுக்கு  வழங்கப்படும் என்றும் அது தெலுங்கானாவில் அவர்களின் மக்கள் தொகை அளவு என்றும் குறிப்பிட்டார்.

காங்கிரஸூடன் தனது கட்சியை இணைப்பது தொடர்பான எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த கேசிஆர் தெலுங்கானா மாநில பிரிப்பு சட்டம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறுமா என்று சந்தேகத்தை எழுப்பினார், பெண்கள் மசோதா போல இதை முடக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.

# டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் கிடைக்கலைன்னு தானே நீங்கள் நாயுடு கட்சியிலிருந்து விலகி டிஆர்எஸ் கட்சி ஆரம்பித்தவர் பேசுறாருங்க.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media