BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 August 2013

அடுத்த தலைநகர் வாய்ப்பு விஜயவாடாவில் எகிறும் ரியல் எஸ்டேட்

அடுத்த தலைநகர் வாய்ப்பு விஜயவாடாவில் எகிறும் ரியல் எஸ்டேட்

தெலுங்கான பிரிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 10 ஆண்டுகள் மட்டும் ஹைதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக இருக்கும், பின் சீமாந்திரா தனக்கென ஒரு தலைநகரை தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் ஹைதராபாத்துக்கு அடுத்த படியாக விசாகபட்டினமும் விஜயவாடாவும் தலைநகருக்கான போட்டியில் உள்ளன.

விசாகபட்டினம் இரண்டாவது பெரிய நகராக இருந்தாலும் விஜயவாடா கடலோர ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது புவியல் ரீதியாகவும், அம்மாநிலத்தில் உள்ள தொழில் முதலீடுகள், உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மையமாக இருப்பதும் அதிக அளவிலான என்.ஆர்.ஐக்கள் முதலீடு உள்ளதாலும் விஜயவாடா தலைநகராக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சீமாந்திர மக்கள் ஹைதராபாத் விவகாரத்தில் தாங்கள் தோற்பதாக உணர்கிறார்கள். மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் உழைப்பையும், பணத்தையும் ஹைதராபாத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் ஹைதராபாத்தை எப்படி தெலுங்கானாவுக்கு மட்டும் விட்டுத்தரமுடியும் என்கிறார்கள்.

விஜயவாடாவுக்கு அடுத்த தலைநகருக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளா நிலையில் விஜயவாடாவில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் கடந்த சில நாட்களில் ராக்கெட் வேகத்தில் எகிறுகின்றது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media