நெல்லையை சேர்ந்தவர் கணபதி (வயது 83) காந்தியவாதி. இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வந்துள்ளார். அங்கு ஒரு டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட விரும்பிய அவர் குடும்பம் அதற்கு இடையூறாக இருக்கும் என்று கருதி திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கடை உரிமையாளர் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கணபதி அந்த டீ கடையை நடத்தி வருகிறார். அவர் கடை மூலம் கிடைத்த வருமானத்தில் கடை உரிமையாளரின் மகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
தேசத்தின் மீது பற்றும் கடை உரிமையாளர் மீது விசுவாசமும் கொண்ட கணபதி கடந்த 20 ஆண்டுகளாக காந்தி ஜெயந்தி அன்று பொது மக்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக டீ வழங்க முடியாததால் ரூ. 1 க்கு காந்திஜெயந்தி அன்று காலை முதல் இரவு வரை டீ வழங்கி வருகிறார்.
இன்று காந்திஜெயந்தி என்பதால் வழ்கம்போல் அவர் ரூ. 1க்கு டீ வழங்கினார். அவரது கடைக்கு ஏராளமானோர் டீ வாங்கி குடித்தனர்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது காந்தியும், காமராஜரும் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர்கள். இன்றைய அரசியல்வாதிகளிடம் மக்கள் நல்வாழ்வுக்கான சிந்தனை இருப்பதாக தெரியவில்லை.
மறைந்தாலும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் காந்தி, காமராஜர் நினைவை போற்றும் வகையில் நான் என்னால் முடிந்த இந்த சிறு பணியை செய்து மன நிறைவு பெறுகிறேன் என்றார்.
இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கடை உரிமையாளர் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கணபதி அந்த டீ கடையை நடத்தி வருகிறார். அவர் கடை மூலம் கிடைத்த வருமானத்தில் கடை உரிமையாளரின் மகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
தேசத்தின் மீது பற்றும் கடை உரிமையாளர் மீது விசுவாசமும் கொண்ட கணபதி கடந்த 20 ஆண்டுகளாக காந்தி ஜெயந்தி அன்று பொது மக்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக டீ வழங்க முடியாததால் ரூ. 1 க்கு காந்திஜெயந்தி அன்று காலை முதல் இரவு வரை டீ வழங்கி வருகிறார்.
இன்று காந்திஜெயந்தி என்பதால் வழ்கம்போல் அவர் ரூ. 1க்கு டீ வழங்கினார். அவரது கடைக்கு ஏராளமானோர் டீ வாங்கி குடித்தனர்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது காந்தியும், காமராஜரும் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர்கள். இன்றைய அரசியல்வாதிகளிடம் மக்கள் நல்வாழ்வுக்கான சிந்தனை இருப்பதாக தெரியவில்லை.
மறைந்தாலும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் காந்தி, காமராஜர் நினைவை போற்றும் வகையில் நான் என்னால் முடிந்த இந்த சிறு பணியை செய்து மன நிறைவு பெறுகிறேன் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.