BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 29 January 2014

டெல்லியில் நிர்பயா கற்பழிக்கப் பட்டதற்கு காரணம் அவரே தான்

பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணங்கள் மூன்று:

1. அவர்கள் அணியும் அரைகுறை ஆடைகள்
2. அவர்களின் உடல் ரீதியான அங்க அசைவுகள்
3. பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு அவர்கள் செல்வது

இவ்வாறு கூறியவர், மஹாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் ஆஷா மிர்ஜே கூறியுள்ளார்.

டெல்லியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், நிர்பயா என்ற பெண்,  தன் ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்து விட்டு வரும் போது, ஒரு பேருந்திற்குள் கூட்டாக கற்பழிக்கப் பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நிர்பயா எதற்காக இரவு வேளையில் வெளியே செல்ல வேண்டும்? அந்த பெண் மீது தான் குற்றம் என்றும், அவர் கற்பழிக்கப் பட்டதற்கு காரணம் அவரே தான் எனவும் ஆஷா மிர்ஜே கூறியுள்ளார்.

மிர்ஜேவின் இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்புகள், கண்டனங்கள் நாடு முழுவதும் எழுந்திருக்கின்றன.

நீங்களும் உங்கள் கண்டனத்தை, 'கமென்ட்'டில் தெரிவியுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media