நியூ யார்க்கில் டைலர் என்ற 8 வயது சிறுவன், கடந்த ஞாயிற்று கிழமை இரவு, தான் தங்கியிருந்த இடத்தில் தீ பற்றி கொண்டதை பார்த்திருக்கிறான். உடனடியாக, காவல் துறைக்கு போன் செய்து அழைத்து விட்டு, குடும்பத்தினர் ஆறு பேரை உறக்கத்தில் இருந்து எழுப்பி, அவர்களை தீயில் இருந்து காப்பாற்றி இருக்கிறான். ஆனால், தன் தாத்தா வீட்டினுள் மாட்டி கொண்டதை அடுத்து, அவரையும் காப்பாற்ற உள்ளே சென்ற போது, தாத்தாவுடன் சேர்ந்து தானும் தீயில் சிக்கி உயிரிழந்தான்.
பின்னர், வீட்டினுள் சென்று பார்த்தபோது, அச்சிறுவனும், தாத்தாவும் கட்டில் அருகே இறந்து கிடந்தனர். உடல் நிலை சரியில்லாத தாத்தாவை கட்டிலில் இருந்து தூக்க முயலும் போது, தீயும், புகையும் அதிகம் ஆனதால், இருவரும் உயிர் இழந்திருக்க கூடும் என்று தெரிகிறது.
இதைப் பற்றி டைலரின் தாய் பேசுகையில், "என் மகனை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு அவன் உயிருடன் திரும்ப வேண்டும். அவனின் தாத்தா அவனுக்கு உற்ற நண்பன் போல் ஆவார். அவருடன் தான் என் மகன் இறந்திருக்கிறான்..தனியாக போகவில்லை." என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.