BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 23 January 2014

2005 க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது: ரிசர்வ் வங்கி

2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து  பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், 2005 முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு பின்னர், 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை. அதனால், வருகின்ற மார்ச் மாதத்திற்கு பின்னால், இந்த நோட்டுகளை பயன் படுத்த முடியாது, ஆனால் வங்கிகளில் இந்த நோட்டுகள் ஏற்று கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.














Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media