BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 23 January 2014

சென்னையில் வழக்கறிஞர் பொது மக்கள் முன்பே வெட்டி கொலை

சென்னை நீதிமன்றத்தில், வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தவர் நித்யானந்தம், வயது 32. அவர் இன்று காலை 9 மணி அளவில், புல்லா அவென்யூ சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்த‌ 4 பேர், கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் உணவகத்திற்குள் புகுந்து, நித்யானந்தத்தை சரமாரியாக வெட்டி வீழ்த்தினர். இந்த தாக்குதலின்போது அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மற்றும் பக்கத்தில் உள்ள கடைகளில் இருந்தவர்கள் எல்லோரும் ஓட்டம் பிடித்தனர். வழக்கறிஞர் உயிர் பிரிந்த பின்னரே அந்த கொலைவெறிக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

காலை நேரத்தில், மக்கள் கூட்டம் நிறைந்த இடத்திலேயே இப்படி ஒரு படுகொலை நடந்தது, அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இதைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.














Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media