BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 23 January 2014

மேற்கு வங்காளத்தில் கூட்டு கற்பழிப்பு, போலீஸ் மேலதிகாரி நீக்கம்

மேற்கு வங்காளத்தில் உள்ள பீர்பம் மாவட்டம், கோல்கத்தாவில் இருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. வேற்று ஜாதி ஆண் ஒருவரை காதலித்தத‌ற்கு தண்டனையாக, 20 வயது பெண் ஒருவரை கற்பழிக்குமாறு அந்த கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர். அதன் படியே அந்த பெண்னை ஒருவர் மாற்றி ஒருவராக, 12 ஆண்கள் கற்பழித்து இருக்கிறார்கள்.

இச்சம்பவத்தை பற்றி பேசிய பெண், "பஞ்சாயத்து தலைவர் கட்டளையின் பேரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த‌ 10-12 பேர் என்னை தொடர்ச்சியாக கற்பழித்தனர், எத்தனை முறை என்னை கற்பழித்தார்கள் என்று எண்ண கூட முடியவில்லை." என்று கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட அப்பெண்னுக்கு சிகிச்சை தந்து வரும் மருத்துவர், "கற்பழிக்கப் பட்ட பெண்னின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக தான் இருந்து வருகிறது. நிறைய அளவில் ரத்தத்தை இழந்திருக்கிறார். உடல் அளவிலும், மனதளவிலும் உறுதியான பெண்ணாக இருப்பதால் தான் இன்னும் அவர் உயருடன் இருக்கிறார்.", என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, மேற்கு வங்காள மாநில முதல்வர் மமதா பேனர்ஜி, பீர்பம் பகுதி போலீஸ் மேலதிகாரியை(எஸ்.பி) பணி நீக்கம் செய்தார், மேலும், கற்ப்ழிப்பில் ஈடுப்பட்ட 12 பேர், மற்றும் பஞ்சாயத்து தலைவரையும் போலீசார் கைது செய்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media