BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 23 January 2014

ஊட்டி அருகே மூவரை கொன்ற புலி சுட்டு கொல்லப்பட்டது

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 3 பேரை புலி ஒன்று அடித்து கொன்றது. இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 18 நாட்களாக, வனத்துறையினர் மற்றும் போலீசார் புலியை தேடி வந்தனர். மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியையும் மேற்கொண்டனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 78 இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒரு பசு மாட்டையும், புலி அடித்து கொன்றது. இதனால் தேடுதல் வேட்டை தீவிரமானது. ஒரு வழியாக, வனத்துறையினர் நேற்று மாலை புலியை கண்டுபிடித்து, சுட்டு கொன்றனர். 18 நாட்களாக ஊட்டி மக்களிடம் நிலவி வந்த பயமும், பதற்றமும்  நீங்கியது.














Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media