மீனவர்கள்
பிரச்சினை தொடர்பாக, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த செவ்வாய்கிழமையன்று 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது
செய்துள்ளது. இந்நிலையில், கொழும்புவில், நிருபர்களை சந்தித்து பேசிய
இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே, "அத்து மீறி எங்கள் கடல்
எல்லைக்குள் நுழையும் மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம்." என்று
கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாடு விவகாரத்தில் மத்திய அரசு
சுதந்திரமாக செயல்படுகிறது என்றும், எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் இந்திய
அரசு அவர்களிடம் சொன்னதே இல்லை என்றும் தெரிவித்தார்.
"இந்திய
அரசு, தமிழக மீனவர்களை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று விடுத்த
வேண்டுகோளை ஏற்று கொள்ள முடியாது, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய
யாருக்கும் உரிமை இல்லை, பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம்.", என
ரஜிதா சேனரத்னே திட்டவட்டமாக கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.