BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 23 January 2014

மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை எதிரே காமராஜர் சாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை 2006–ல் தமிழக அரசு நிறுவியது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் அச்சிலையை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். 

இந்த சிலை சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த இடத்தில் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்களை இந்த சிலை மறைக்கிறது. எனவே சிவாஜி சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ந‌டிகர் சிவாஜிகணேசன் சிலை இரு முக்கிய சாலைகளுக்கு நடுவில் வைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கின்றது. அதனால் பொது நலன் கருதி அச்சிலையை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்கள்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media