BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 February 2014

கேஜ்ரிவால் மீது ஜி.கே.வாசன் வழக்கு போடுகிறார்

இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்வாதிகள் பட்டியல் ஒன்றை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு இருப்பதற்கு அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. இதைப் பற்றி அறிக்கை வெளியிட்ட வாசன், "சட்டத்தின் மீது எவ்வித மரியாதையும் இல்லாத, முன்னேற்றப்பணிகள் மீது எவ்வித அக்கறையுமற்ற பொறுப்பில்லாத கேஜ்ரிவாலிடம் இருந்து எனக்கு நற்சான்றிதழ் எதுவும் தேவையில்லை. அவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்." என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியினர், மற்ற அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் மலிந்தவர்கள் என்றும், ஏதோ தாங்கள் மட்டுமே யோக்கியமானவர்கள் என்ற ஆணவத்துடன் இருக்கின்றனர் என்று அவர் கடுமையாக சாடினார்.

கேஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர போவதாக கூறிய வாசன், "என் மீது எந்த வகையான ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சகத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்ட பல மாற்றங்களை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்." என்றும், கேஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்று கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media