ஜலந்தரில் தங்கிப் படித்து வந்த இருபது வயதான டேனியம் (இவரது தந்தை அருணாச்சல் பிரதேச மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார்), புதன்கிழமையன்று டெல்லிக்கு வந்திருந்தார். பின்னர் லாஜ்பத் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு தனது நண்பருடன் போயிருந்தார். அப்போது நிடோவின் ஹேர்ஸ்டைலைப் பார்த்த கடைக்காரர்கள் சிலர் அவரைக் கிண்டலடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த நிடோ, கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். கோபத்தில் கடையின் கண்ணாடியை அடித்து உடைத்து இருக்கிறார். இதையடுத்து, கடையில் உள்ள ஐந்து பேர், நிடோவை கம்பி உள்ளிட்டவற்றை வைத்து தாக்கியுள்ளனர். அப்பொழுது, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நிடோவை மீட்டனர்.
இதையடுத்து, நிடோ வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அடுத்த நாள் காலையில் பிணமாகக் கிடந்தார். தாக்குதலில் ஏற்பட்ட காயத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும், அதிரிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நிடோ வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அடுத்த நாள் காலையில் பிணமாகக் கிடந்தார். தாக்குதலில் ஏற்பட்ட காயத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும், அதிரிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.