BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 February 2014

உத்தர பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி, 5 பேர் கற்பழிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் மாவானா பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியை 5 இளைஞர்கள் கடத்தி கற்பழித்துள்ளனர். கடந்த புதன்கிழமையன்று, கடைக்கு சென்ற அந்த 14 வயது மாணவியை, ஐந்து வாலிபர்கள் கடத்தி, காட்டுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவரது கைகளை கட்டிவிட்டு மயக்க மருந்து கொடுத்துள்ளார்கள்.

அந்த பெண் சுய நினைவை இழந்த பிறகு, ஐந்து பேரும் ஒருவர் மாற்றி ஒருவராக கற்பழித்துள்ளனர். வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து விட்டு,  அந்த ஐந்து பேரும் அப்பெண்ணை அவரது வீட்டின் அருகே விட்டுச் சென்றுள்ளனர்.

நடந்த சம்பவத்தை கேட்டு, அப்பெண்ணின் குடும்பத்தினர், காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர், மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media