BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 February 2014

தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க தாமதம் ஆனது ஏன்?

                                         

தேமுதிக மாநாடு நாளை உளுந்தூர்பேட்டையில் நடக்கவிருக்கிறது. இம்மாநாட்டில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. இம் மாநாட்டுக்கு அனுமதி கோரி கடந்த 11-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலரும், தேமுதிக எம்.எல்.ஏ.வுமான எல்.வெங்கடேசன் மனு அளித்தார். எனினும், மாநாட்டுக்கு போலீஸாரின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, நேற்று பிற்பகல் தான் மாநாடு நடத்த போலீஸார் அனுமதி அளித்தனர்.

அனுமதி அளிக்கும் முன் இருபத்து நான்கு நிபந்தனைகள் தேமுதிகவிற்கு விதிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் பேனர், விளம்பரங்கள் வைக்கக் கூடாது. இரவு 10 மணிக்குள் மாநாட்டை முடிக்கவேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது, போக்குவரத்து இடையூறான வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் இதில் அடங்கும்.

மாநாட்டிற்கு முதலிலேயே அனுமதி அளித்திருந்தால் தமிழகமெங்கும் பேனர்களும், செய்தித்தாள்களில் விளம்பரங்களும் கொடுக்கப்பட்டு கட்சிக்கும், மாநாட்டுக்கும் அதிக விளம்பரம் கிடைத்திருக்கும். அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media