BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 7 January 2014

குப்பைக்கழிவுகளில் குழந்தையை போட்ட அரசு மருத்துவமனை

ராஜேஷ்-நீது வர்மா என்போருக்கு டெல்லியில் உள்ள நர்சிங் ஹோமில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நிலை சரியில்லாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அதை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நர்சிங் ஹோமில் கூறி உள்ளன‌ர். இதை அடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தை உயிர் இழந்தது. இறந்த அக்குழந்தையின் உடலை கேட்டு, அதன் பெற்றோர் வந்த போது தான் தெரிந்தது, அரசு மருத்துவமனையில், எரிக்கபடுவதற்காக வைத்திருந்த குப்பை கழிவுகள் நிரம்பிய வண்டியில், அந்த குழந்தை தூக்கியெரியப்பட்டுள்ளது என்று.

இதையடுத்து, இச்சம்வத்திற்கு காரணமானவர்கள் மேல், கடும் நடவடிக்கை எடுக்க படும் என கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

காவல் துறையில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 297 கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media