BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 7 January 2014

"நீதிமன்றம்..விசித்திர‌ம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது..புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது..."

பீஹாரில் ஒரு வழக்கறிஞர், தன் மகன் வேறு ஜாதி பெண்ணை மணந்ததால், தன் மானம், மரியாதை சமூகத்தில் பறி போய் விட்டதாகவும், அதற்கு மான நஷ்ட ஈடாக, ஒரு கோடி ரூபாய் தன் மகன் தனக்கு தர வேண்டும் என்று, வழக்கு தொடுத்து இருக்கிறார்.

இந்த வழக்கு செல்லுமா என நீதிமன்றம் இம்மாதம் 18ம் தேதி ஒரு முடிவுக்கு வரும்.

கலப்பு திருமணங்கள் நாடெங்கிலும் அதிகரித்து வந்தாலும், பீஹாரில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அம்மாநில அரசு கலப்பு திருமணங்கள் அதிகரிக்க பட வேண்டும் என்பதற்காக, வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்ளும் மகளிர்க்கு அளிக்கப்படும் ஊக்கதொகையை 25,000ரூபாயில் இருந்து, 50,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், தன் மகன் சுஷாந்த் செய்த கலப்பு திருமணத்தால்,தன் குடும்பத்தின் கௌரவம் நிலை கொலைந்து விட்டதாகவும், அதற்காக தான் நீதிமன்றத்தை அணுகியிருப்பதும் சரியே என வாதாடுகிறார், பீஹார் வழக்கறிஞர் ஷர்மா. மேலும், தன் மகன் தன் சுஷாந்த் என்ற பெரயரை பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் அதற்காக 10,000 ரூபாய் காபி ரைட்ஸ் தொகையாக அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media