BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 7 January 2014

உதய் கிரண் தற்கொலையின் பின்னணியில் சிரஞ்சீவியா??

கடந்த ஒரு வருடமாக எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால், மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறார் உதய் கிரண்.
அவர் இறந்த அன்று, அவர் மனைவியை மட்டும், ஒரு பிறந்த நாள் விழாவிற்கு அனுப்பி விட்டு, "ஐ லவ் யூ" என்ற எஸ்.எம்.எஸ் ஒன்றையும் இறுதியாக அனுப்பி விட்டு, தனது அறையிலேயே தூக்கிலிட்டு கொண்டுள்ளார்.

இதையடுத்து, ஆந்திராவில் உள்ள அருண் குமார் என்ற வழக்கறிஞர், மனித நேய ஆணைக்குழுவிடம், உதய் கிரண் தற்கொலை பற்றி விசாரணை நடத்தும் படி மனு அளித்துள்ளார்.

உதய் கிரணுக்கு படவாய்ப்புகள் வராமல் போனதற்கு, இரு சாதியை சேர்ந்த, நான்கு குடும்பங்களே காரணம் என்றும், மறைமுகமாக, உதய்கிரண் தற்கொலையையே அவர்கள் தான் தூண்டினர் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2003ம் ஆண்டு, சிரஞ்சீவி மகளுடன் உதய் கிரணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது, அந்நிலையில், சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணுக்கு, ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அச்செய்தியில், உதய் கிரணுக்கும் தனக்கும் உறவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து, சிரஞ்சீவி மகளுடன் நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் நடந்த பின்னர், உதய் கிரணுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புகளை, சீரஞ்சீவி, என்.டி.ஆர், தில் ராஜு மற்றும், தக்கு பாட்டி குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியாதகவும், அதுவே அவருக்கு மன அழுத்ததை அளித்து, அவரை இந்த தற்கொலை முடிவுக்கு தள்ளியதாகவும் கூறிகிறார் வழக்கறிஞர் அருண் குமார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media