லஞ்சம் வாங்கியதற்காக டெல்லி குடிநீர் வாரிய அதிகார்கள் மூவர், கேஜ்ரிவால் அளித்த உத்தரவின் பேரில், வேலை நிறுத்தம் செய்யபட்டுள்ளனர்.
மேலும், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்த 800 அதிகாரிகள் வேலை இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.
விநோத் குமார், பட்வாரி சுனில் குமார், அதுல் பிரகாஷ் என்ற டெல்லி குடிநீர் வாரியத்தின் சேர்ந்த மூவர், லஞ்சம் வாங்கும் போது, கேமராவில் பிடிப்பட்டதை, தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பியதை அடுத்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கேஜ்ரிவால், பதவி ஏற்ற அன்றே, குடிநீர் வாரிய அதிகாரியை வேலை இடமாற்றம் செய்தார் என்பது குறிப்படத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.