பொள்ளாச்சியை சேர்ந்த 53 வயதான பாலசுப்ரமணி, தன் மனைவியை இழந்தவர். தன் மகள், மற்றும் மகன்களை திருப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்து இருந்தார். காப்பகத்திற்கு அடிக்கடி சென்று அவர் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பகத்திற்கு சென்ற அவர், மேலாளரிடம் தன் 12 வயது மகளுக்கு மொட்டை போட வேண்டி இருப்பதால் சிறுமியை பழனிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மகளை காப்பகத்தில் இருந்து அழைத்துச் சென்ற பாலசுப்ரமணி, பழனிக்கு செல்லும் முன்பு புத்தாடை வாங்கித் தருகிறேன் என்று கூறி, சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தந்தையிடம் இருந்து தப்பித்து காப்பகத்திற்கு வந்துவிட்டார்.
காப்பகத்திற்கு வந்தபோதிலும் அவர் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தவரை பார்த்து, காப்பகத்தின் மேலாளர் விசாரித்தபோது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலசுப்ரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பகத்திற்கு சென்ற அவர், மேலாளரிடம் தன் 12 வயது மகளுக்கு மொட்டை போட வேண்டி இருப்பதால் சிறுமியை பழனிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மகளை காப்பகத்தில் இருந்து அழைத்துச் சென்ற பாலசுப்ரமணி, பழனிக்கு செல்லும் முன்பு புத்தாடை வாங்கித் தருகிறேன் என்று கூறி, சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தந்தையிடம் இருந்து தப்பித்து காப்பகத்திற்கு வந்துவிட்டார்.
காப்பகத்திற்கு வந்தபோதிலும் அவர் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தவரை பார்த்து, காப்பகத்தின் மேலாளர் விசாரித்தபோது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலசுப்ரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.