BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 16 February 2014

+1 மாணவனை கார் ஓட்டவிட்டு அழகு பார்த்ததால், விபத்தில் குடும்பமே பலி

திருப்பூரில் வசித்து வரும் துரைசாமி-சிவகாமி என்ற தம்பதியினரின் ஒரே மகன் செல்வவேல், வயது 16. செல்வவேல் தாராபுரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்த மகனை, வார இறுதி நாட்களை வீட்டில் கழிக்க, அவரை அழைத்து வர துரைசாமி தனது மனைவியுடன் காரில் சென்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் தாராபுரத்திற்கு சென்று மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் திரும்பும் போது, போக்குவரத்து குறைவாக உள்ள சாலை வந்தபோது, செல்வவேல் காரை ஓட்டி இருக்கிறார். அப்போது எதிரில் தாராபுரம் நோக்கி வந்த பேருந்தை பார்த்த செல்வவேல் நிலைதடுமாறி காரை பேருந்து மீது மோதினார். இதில் செல்வவேல் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media