BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 16 February 2014

அதிமுக கட்சியை விரட்ட மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்- ஸ்டாலின்



திருச்சியில் இன்று நடந்த திமுக 2வது நாள் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வராதா, மத்தியில் ஒரு நல்ல ஆட்சி வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஒரு ஜனநாயகத்தை கொன்று கொண்டிருக்கும் இந்த அதிமுக ஆட்சியை அகற்றிட முடியாதா என்கிற நிலையில் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் மாநாட்டில் பேசிய அவர், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள், அவர்களது விருப்பதற்கு ஏற்ப கூட்டணியை குழப்பிக்கொண்டு, அவர்களாக ஒரு கூட்டணியை அமைத்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று கலைஞர் ஆற்றவிருக்கிற உரையின் போது, நமக்கு நாடாளுமன்ற தேர்தலின் வியூகத்தை அமைத்து தரவிருக்கிறார் என்று கூறியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media