நேற்று திருச்சியில் நடந்த திமுக மாநாட்டின் போது, குஷ்பூ உணர்ச்சிகரமாக, ஆவேசத்துடன் பேசினார். முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசும் போது, அவரை கடுமையாக சாடியும், சவால்விடும் படியாகவும் பேசினார்.
"அம்மையார் ஜெயலலிதா வெற்றி அவர்களுக்கு தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன். வெற்றி திமுகவுக்குத்தான். அம்மையார் ஆதிக்கம் செலுத்துகிறார். நம்மை உற்சாகப்படுத்துவதற்கு தளபதி இருக்கிறார். யாருக்கும் எதுக்கும் நாம் பயப்படவேண்டாம். எத்தனை குற்றச்சாட்டுகள் வைக்கிறீர்கள் எங்கள் மீது வைக்கப்பட்டாலும், அத்தனையும் பொய் என்று நிரூபிப்போம்." என்று கோபத்துடனும், கொதிப்புடனும் பேசினார் குஷ்பு.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.