BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 16 February 2014

ரூ. 3300 கோடி 'கட்டிங்' அடித்து விட்டார் ஜெ., என காரசாரமாக பேசிய தயாநிதி



திருச்சி திமுக மாநாட்டில் இன்று தயாநிதி மாறன் பேசினார். தனது பேச்சின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தாக்கி, கடுமையாக பேசியது, அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. ஜெயலலிதாவை அவர் ஒருமையிலேயே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஜெயலலிதாவே உன் கனவு பலிக்குமா? நீ பிரதமராக வேண்டும் என்ற கனவு பலிக்குமா? இந்தக் கூட்டத்தை பார்த்த பிறகாவது திருத்திக்கொள். உனது கனவு பலிக்காது." என்று தயாநிதி மாறன் ஆவேசமாக கூறினார்.

மேலும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அவர் பேசியதவாது:

இன்று பகல் கனவு காணும் ஜெயலலிதா செய்த பெரிய சாதனை, டாஸ்மாக் தான். டாஸ்மாக்கில் பிரபலமான பிராண்ட் வேண்டும் என்றால் கேப்டன் பிராந்தி, கேப்டன் ரம், ஜெட் பிராந்தி, ஜெட் விஸ்கி என சுமார் 32 ஐட்டங்கள் ஒரே ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் மிடாஸ். அதற்கு சொந்தக்காரர்கள் யார் என்றால் ஜெயலலிதாவும், சசிகலாவும். அந்த நிறுவனத்தில் இருந்து டாஸ்மாக்கிற்கு மாதத்திற்கு 11 லட்சம் பெட்டிகள் சப்ளை செய்கிறார்கள். மற்ற நிறுவனங்களிலும் இருந்து மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் பெட்டிகள் வாங்குகிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் ஜெயலலிதாவின் மிடாஸ் நிறுவனம் உங்கள் பணத்திலிருந்து ரூபாய் 3,300 கோடி கட்டிங் அடித்து நேராக வங்கியில் வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராகவேண்டுமாம். சற்றே நினைத்து பாருங்கள். ஜெயலலிதா பிரதமரானால் என்ன ஆகும்? காலையில் ரெட் போர்ட்டில் கொடி ஏற்றுவார். மாலையில் பெங்களூர் கோர்ட்டில் சாட்சி சொல்லுவார். இதுதான் நடக்கும்.

தயாநிதி மாறமன் இன்று வழக்கத்திற்கு மாறாக, காரசாரமாக, கடுமையாக பேசியிருப்பது திமுக வினரை திகில் அடைய வைத்து, கவனிக்க வைக்கும் வகையில் இருந்தது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media