திருச்சியில் நேற்று கோலாகலமாக தொடங்கிய திமுக மாநில மாநாட்டில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் நேற்று பேசினர். அப்பொழுது இறுதியாக பேசிய பேராசிரியர் அன்பழகன், "1943-ம் ஆண்டிலிருந்து திராவிடர் கழகம் தொடங்கி 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன். இதுவரையில் இதுபோன்ற மாநாட்டை என் வாழ்நாளில் பார்க்கவில்லை." என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் பேசிய அவர், திருக்குறள், தொல் காப்பியம் தந்தது தமிழ் மொழி. தமிழ்மொழிக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. தமிழ் மொழியை நாம் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குப் பெருமை என்பதை உணர வேண்டும். உலகத்தவர்கள் பாராட்டத்தக்கதாக இருந்தது தமிழினம். நம் கலாச்சாரம் சிறப்பானது. அதை சிலர் திட்டமிட்டு அழிக்கப் பார்க்கிறார்கள். பெரியார் இல்லையெனில் நம் இனம் இந்த முன்னேற்றத்தைக் கூட அடைந்திருக்காது என்று அவர் கூறினார்.
வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40-ம் நமக்கு என்பது அரசியல் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழ் இனத்தைக் காப்பாற்றவும்தான் என்று பேராசிரியர் தன் பேச்சின் போது கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.