BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 16 February 2014

அஜீத் தான் அடுத்த 'சூப்பர் ஸ்டார்': சிம்பு


ரஜினிகாந்திற்கு பிறகு, அடுத்த‌ சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அடிக்கடி எழுவதுண்டு. சிலர் விஜய் என்பார்கள், சிலர் அஜீத் என்பார்கள், சிலர் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று யாருமே கிடையாது; ரஜினி இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்பார்கள். இதைப் பற்றி நடிகர் சிம்புவை கேட்ட போது, "நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். என் முதல் படமான மோனிஷா என் மோனாலிஷா ரிலீஸானபோது கூட நான் என் நண்பர்களுடன் ரஜினி சார் படமான படையப்பாவை பார்க்க சென்றுவிட்டேன். ரஜினிக்கு பிறகு, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்றால், அது அஜீத் தான் என்றார்." என்று கூறினார். 

அஜீத்தின் தீவிர ரசிகர் என்று தன்னை அடிக்கடி கூறிக்கொள்ளும் அவர், "அஜீத்தில் நான் என்னை பார்க்கிறேன். படங்களிலும் சரி, நிஜத்திலும் சரி, அஜீத் ஒரு ஹீரோ.", என்று பெருமையாக கூறியிருக்கிறார்.

சிம்புவின் வாலு படம், அஜீத்தின் பிறந்தநாளான மே மாதம் 1ம் தேதி வெளிவர இருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media