மக்களவைத் தேர்தலை பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜக தலைவர்கள் ஊழல் குறித்துப் பேசுகிறார்கள் .ஆனால் கர்நாடகம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாஜக ஆட்சி நிர்வாகத்தில் நிலவிய ஊழல்கள் பற்றி அவர்கள் பேசுவதில்லை. ஊழலைப் பொறுத்தவரை ராஜஸ்தான் மாநில பாஜக அரசு முதலிடத்தில் உள்ளது. ஆட்சியாளர்களின் ஊழல் விவகாரங்களை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்.
வறுமையில் இருந்து மக்களை மீட்கவும் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகள் கிடைக்கச் செய்யவும் காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. ஏழைகளை காங்கிரஸ் ஒருபோதும் மறந்தது இல்லை. நாடு முழுவதும் வறுமையில் வாடிய சுமார் 15 கோடி பேரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீட்டெடுத்துள்ளது. தற்போது வறுமைக் கோட்டுக்கு மேலேயும் நடுத்தர வர்க்கத்துக்கு கீழேயும் சுமார் 70 கோடி மக்கள் உள்ளனர். அவர்களை பொருளாதாரரீதியாக முன்னேற்ற, அவர்களுக்காக அரசியல் நடத்த காங்கிரஸ் விரும்புகிறது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.