BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 March 2014

உருளை கிழங்கு வறுவலில் ஏன் தக்காளி சேர்க்கவில்லை என்று மனைவியை அடித்து கொலை செய்த கணவன்


உத்தரகாண்ட்டில் விரேந்தர் சிங் என்ற 32 வயதானவர், பூத்நாத் கோவிலில் பாதுகாப்பு காவலராக பணி புரிந்து வருகிறார்.  இவரது மனைவிக்கு 30 வயது.

விரேந்தர் அவரது வீட்டில், மனைவியிடம் அவர் சமைத்த உருளைக்கிழங்கு வறுவலில், ஏன்  தக்காளி சேர்க்கவில்லை என்று சண்டை போட்டு இருக்கிறார். சண்டை பெரிதாகி, வன்முறையில் ஈடுப்பட்ட விரேந்தர், அவர் மனைவியின் தலையை சுவற்றில் இடித்து இருக்கிறார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த அவரின் மனைவி உயிர் இழந்தார்.

விரேந்தருக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது, அவருக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media