BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 March 2014

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை யோகா மையத்திற்கு தீ வைப்பு


உலகம் முழுவதும் 152 நாடுகளில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை யோகா அமைப்பு செயல்படுகிறது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத் புறநகர் பகுதியிலும் வாழும் கலை யோகா மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு சிலர் சனிக்கிழமை அன்று தீ வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “சனிக்கிழமை மாலை இதன் வளாகத்துக்குள் சுமார் 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்து அங்கிருந்த காவலாளிகளிடம், உள்ளே பணம் எங்கே இருக்கிறது? என கேட்டுள்ளனர். காவலாளிகள் தெரியாது என கூறியதும் அவர்களை கட்டிப்போட்டுவிட்டு கட்டிடத்துக்கு தீவைத்தனர். பிறகு தப்பியோடிவிட்டனர்” என்றனர்.

ஆசிரம நிர்வாகி மீனா கபீனா கூறுகையில், “அந்த கும்பல் காவலாளிகளை கட்டிப்போட்டு, கட்டிடத்துக்கு தீவைத்தது. மற்றபடி காவலாளிகளிடம் எதுவும் பேசவில்லை” என்றார். 2012-ல் பாகிஸ்தான் சென்ற ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்புக்காக இந்த மையத்தை திறந்துவைத்தார். தாலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த தாம் தயார் என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media