தற்போது சென்னையில் தங்கியிருக்கின்ற அழகிரி, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் ஸ்டாலினின் ஆதரவாளர்கள். வேட்பாளர்கள் தேர்வில் முறையான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் நிலவும் அதிருப்தி குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை. அதனை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
மதுரையில் எனக்கு சீட் வழங்கவில்லை. நான் தான் சீட்டே கேட்கவில்லையே, சஸ்பெண்டு செய்தவர்களிடம் போய் எப்படி சீட் கேட்க முடியும்?
தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் டி.கே.எஸ்.இளங்கோவனை தவிர மற்றவர்கள் யாரும் கருணாநிதியால் முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் இல்லை. தலைவரால் கூட தான் விரும்பியவர்களை வேட்பாளராக அறிவிக்க முடியாத நிலை மிகவும் வேதனை அளிக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும். பல தொகுதிகளில் திமு.க. வேட்பாளர்கள் 3–வது இடத்துக்கு தள்ளப்படுவார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.