BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 March 2014

பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் இலவச டீ கொடுக்க கூடாது: தேர்தல் ஆணையம்


பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் தொண்டர்களை உற்சாகப்படுத்த இலவசமாக டீ வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட உத்தரபிரதேசத்தில் தான் பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் அதிக அளவில் இலவச டீ வழங்கப்படுகிறது. மோடி பெயரில் இலவச டீ கொடுப்பதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தெரிவித்தன. இதையடுத்து உத்தரபிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா இதுப்பற்றி ஆய்வு செய்தார்.

இலவசமாக டீ கொடுப்பதால் வாக்களர்கள் மனநிலை மாறும். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா கூறினார். எனவே, அவர் பா.ஜ.க. பிரச்சார கூட்டங்களில் இனி இலவச டீ கொடுக்க கூடாது என்று தடை விதித்தார்.

இதற்கு உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை பாரபட்சமானது என்று குற்றம் சாட்டிய அவர், "சமாஜ்வாடி கட்சியினர் டிஜிட்டல் டைரி கொடுத்து வருகிறார்கள். அது தேர்தல் அதிகாரி கண்ணுக்கு தெரியவில்லையா?",  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media